Home Highlights வேள்விக்குடி செப்பேடுகள்

வேள்விக்குடி செப்பேடுகள்

by Tamil Heritage Foundation
0 comment

பாண்டியர்களது ஆவணமாகிய வேள்விக்குடி செப்பேடுகள் பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

10 செப்பேடுகள் 27.5 x 8 அளவிலான மெல்லிய செப்பு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்தின் மேல் எந்த முத்திரையும் இல்லை.
செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.

வரிகள் 1- 30 வரை மற்றும் 142 -150 வரை கிரந்த எழுத்துருவிலும், வரிகள் 31 லிருந்து 141 வரை 151ல் இருந்து 155 வரை வட்டெடுத்து தமிழ் எழுத்துருவிலும் அமைந்துள்ளன.

தமிழ் பகுதிகளில் வருகின்ற சமஸ்கிருத எழுத்துக்கள் கிரந்தத்தில் உள்ளன.

செப்பேடுகள் ஒவ்வொன்றும் கிரந்த எழுத்துகளால் வரிசை எண் போடப்பட்டுள்ளன.

சமஸ்கிருத பகுதி சிவபெருமானை புகழ்ந்து பாண்டியர்கள் பரம்பரையை புகழ்ந்து கூறும் புராணக் கதையிலிருந்து தொடங்குகிறது.

தமிழ் பகுதி இந்தச் செப்பேடு குறிப்பிடும் நன்கொடையைக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னன் பல்யாகக்குடுமி பெருவழுதி ”வேள்விக்குடி” என்ற கிராமத்தை நற்கூரன், அதாவது கொற்கை கிராமத்தின் தலைவன் வேத வேள்விகள் செய்வித்தமைக்காக வழங்கிய நிலக் கொடையைப் பற்றி கூறுகிறது.

இந்தச் செப்பேடு மேலும் எவ்வாறு அவனது (பாண்டியன்) எதிரிகள் இந்த நிலப் பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை கூறுகிறது. பல போர்களுக்குப் பிறகு பாண்டியர்கள் வம்சத்தில் பிறந்த பராந்தக நெடுஞ்செழியன்  போரில் வெற்றி கண்டு கைப்பற்றி இப்பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினான்.

-சுபா
11.3.2025

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.