Home சிறப்பு பக்கங்கள் பனை விதைகள் சேகரிப்பு – மாணவர் மரபு மையம

பனை விதைகள் சேகரிப்பு – மாணவர் மரபு மையம

பனை விதைகள் சேகரிப்பு - மாணவர் மரபு மையம்.

by Tamil Heritage Foundation
0 comment
உசிலம்பட்டி எழில் அறக்கட்டளை மூலமாக பனை விதைகளை அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டத்திற்கு  திரு.சண்முகம், அவர்கள் திரு.பாலசந்தர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதை ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பனை விதைகளை நட திட்டமிட்டுள்ளனர். இப்பணியில் திரு.பாலச்சந்தர் அவர்கள் நமது  த.ம.அ மாணவர் மரபு மையத்தையும் இணைத்திட விரும்பி மாணவச் செல்வங்களிடம் பனையின் நன்மைகளை கூறி சேகரித்து வர கோரிக்கை வைத்தார்.
விடுமுறை நாளான ஞாயிறு அன்று மட்டும் சுமார் 80 க்கு மேற்பட்ட விதைகளை சேகரித்து வந்தனர்.
மேலும், திரு.பாலச்சந்தர் அவர்களின் மரம் ஏறக்கூடாது என்ற அன்புக் கட்டளையால் கீழே விழுந்த பனம் பழங்களை மட்டுமே சேகரித்து வந்தனர்.
அத்தோடு பணம் கொடுத்து வாங்கிய சுமார் 500 பனை விதைகளோடு பெருமகிழ்வாய் மதுரையிலிருந்து அரியலூருக்கு அனுப்பி வைத்தோம்.
வருங்கால தலைமுறைக்காக!!!!
நன்றி திரு.பாலச்சந்தர் ஐயா..
அன்புடன்:-
  கிருத்திகா கிருஷ்ணன்
   த.ம.அ இளையோர் பேரவை.
   
 
 
 
 
  

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.